ஓய்வுபெற்ற கூடைப்பந்து நட்சத்திரம் கோப் பிராயன்ட், லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தனியார் ஹெலிகாப்டர் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொருறுங்கி வெடித்துச் சிதறியது.
அந்தச் சம்பவத்தில் அவரும் அவருடன் பயணித்த மகள் உட்பட 4 பயணிகளும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தை அறிந்து அங்கு விரைந்த அவசரகால மீட்புக் குழுவினர், ஹெலிகாப்டரில் மூண்ட தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அவர்களால் பயணிகள் எவரையும் காப்பாற்ற முடியவில்லை.
கோப் பிராயன்ட்டின் மனைவி மற்றும் 4 மகள்களுடன் வாழ்ந்து வந்தவர். அவருக்கு, கடந்த ஆண்டு ஜூன் மாதம், கடைசி மகள் பிறந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments
No Comments Here ..