இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட தேசிய செயற்பாட்டு குழு இன்று (27) கூடவுள்ளது.
அதற்கமைய இந்த குழு இன்று மாலை 5 மணிக்கு சுகாதார அமைச்சர் தலைமையில் கூடி கொரோன்னா வைரஸ் தொடர்பாகவும் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளது.
நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக 22 பேர் அடங்கிய குழு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த குழுவின் உறுப்பினர்கள் இன்று முதன்முறையாக கூடவுள்ளனர்.
அதற்கமைய பின்வருவோர் அடங்கிய குழுவை சுகாதார அமைச்சர் நேற்று (26) நியமித்திருந்தது
1. ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
2. பத்ரானி ஜயவர்தன, சுகாதார செயலாளர்
3. டொக்டர் அனில் ஜசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
4. மேலதிக செயலாளர் டொக்டர் சுனில் டி அல்விஸ்
5. மேலதிக செயலாளர் வைத்தியலட்சுமி சோமதுங்க
6. டொக்டர் நிஹால் ஜயதிலக
7. விசேட வைத்தியர் அனுருத்த பதேனிய
8. டொக்டர் பிரசன்ன குணசேன, மருந்துக் கூட்டுதாபனத்தின் தலைவர்
9. மேலதிக செயலாளர் ஆனந்த விஜேவிக்ரம
10. இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிகேடியர் டொக்டர் கிர்ஸாந்த பெர்னாண்டோ
11. தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர
12. டொக்டர் பபா பாலிஹவடன
13. மருத்துவ ஆராய்ச்சி பிரிவின் டொக்டர் ஜயருவன் பண்டார
14. விமா நிலைய நிறுவனத்தின் தலைவர் ஜி.ஏ.சந்திரசிறி
15. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளரும் நியமிக்கப்பட்டுள்ளார்
இந்த குழு கொரோனா வைரஸ் தொடர்பாக எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தொழினுட்ப ரீதியாக திட்டங்களை தயாரிப்பதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க தலைமையில் இன்று முற்பகல் 11 மணிக்கு சுகாதார அமைச்சில் கூடவுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் மேலும் 2 வெளிநாட்டவர்கள் ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் இருந்து வருகைதந்த இருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
47 வயதான இந்திய பிரஜை ஒருவரும் 37 வயதான பாகிஸ்தான் பிரஜையுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..