09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

பாலியல் பலாத்காரம் செய்தால் அதே பெண்ணுடன் திருமணம்!

துருக்கியில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் அதே பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் வகையில் சட்டம் கொண்டுவர, அதிபர் எர்டோகன் அரசு முடிவு செய்துள்ளது.

மேற்காசிய நாடான துருக்கியில், குழந்தை பருவத்திலேயே திருமணம் செய்வது வழக்கத்தில் உள்ளது. கடந்த, 10 ஆண்டுகளில், மொத்தம், 4 லட்சத்து, 82 ஆயிரத்து, 908 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. அத்துடன், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துள்ளன. கடந்த, 2017ம் ஆண்டு மட்டும், 21 ஆயிரத்து, 957 சிறுமிகள் கர்ப்பமாகினர். சிறுமிகள் மட்டுமின்றி, இளம் பெண்களும் பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர்.

இதையடுத்து, குழந்தை திருமணம், பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை கட்டுப்படுத்த, துருக்கி அரசு, பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டால், அந்த பெண்களையே, திருமணம் செய்துகொள்ள வழிவகுக்கும் சட்ட மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்ற, துருக்கி அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த, 2016ம் ஆண்டு, துருக்கி பார்லிமென்டில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எனினும், அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்ததை தொடர்ந்து, அந்த மசோதா திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில், அந்த மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற, எர்டோகன் அரசு, மீண்டும் முடிவு செய்துள்ளது.

இந்த திட்டம், கற்பழிப்பு, குழந்தை திருமணம் ஆகியவற்றை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக, விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்தவே, இந்த மசோதாவை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக, துருக்கி அதிபர் எர்டோகன் கூறினார்.





பாலியல் பலாத்காரம் செய்தால் அதே பெண்ணுடன் திருமணம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு