முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 'புலிக்குளம்' பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் 28.07.2013 அன்று கள விஜயத்தினை மேற்கொண்டனர்
குளத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் தற்போது பயன்பாடற்று இருக்கும் இக் குளத்தினை எதிர்காலத்தில் அபிவிருத்தி நோக்கத்திற்காக எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற நோக்கிலும் இந்த கள விஜயம் அமைந்தது.
இதன்போது மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன்(நிர்வாகம்), மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (காணி), மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ஜெயபவாணி, துணுக்காய் பிரதேச செயலாளர் லதுமீரா, விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
குறிப்பாக இந்த குளம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆளுகையில் இருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக தொடர்ச்சியாக அபிவிருத்தி குழு கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டு வந்த நிலையில் அதிகாரிகள் நேரில் சென்றுபார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..