தனிப்பட்ட காரணங்களுக்காக மாத்தறையிலிருந்து கொழும்பு உலக வர்த்தக மையத்திற்கு வருகைத் தந்திருந்த ஒருவர் மயக்கமடைந்த நிலையில் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து மேற்படி நபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இருப்பினும், குறித்த செய்தி முற்றிலும் தவறானது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நபர் இன்று காலை உணவு மற்றும் மதிய உணவு உட்கொள்ளாது இருந்துள்ளதாகவும், இதன் காரணமாக அவர் மயக்கமடைந்துள்ளதாகவம் வைத்தியசாலை வட்டார செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.













0 Comments
No Comments Here ..