'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' எனும் தொனிப்பொருளில் 'மலையகம் 200' எழுச்சிப் பேரணிக்கு ஆதரவாக புதன்கிழமை (02) புதுக்குடியிருப்பில் ஆரம்பமான நடைபவனியானது நேற்று (03) இரண்டாம் நாளாக கிளிநொச்சியிலிருந்து மீண்டும் பயணத்தை தொடங்கி வவுனியாவை சென்றடைந்தது.
அதனையடுத்து, வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் குறித்த பேரணியினர் மலையக மக்கள் பேரணிக்காகவும் மலையக மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.
இதில் மதத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'மலையக மக்களும் இந்த நாட்டின் மக்களே', 'மலையக மக்கள் இலங்கை தேசிய இனம்', 'மலையக மக்களை ஏமாற்றாதே', 'லயன் குடியிருப்புக்கள் வேண்டாம்' என்றவாறு கோஷங்களையும் எழுப்பினர்.
0 Comments
No Comments Here ..