18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

வவுனியாவில் வீட்டில் தூக்கில் தொங்கிய குடும்பஸ்தார்

வவுனியா, புதிய கற்பகபுரம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் அவரது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு இன்று (18) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா, புதிய கற்பகபுரம் கிராமத்தை சேர்ந்த 40 வயதுடைய ரூபன் என்பவரே அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

வாகனம் திருத்தும் தொழில் புரியும் இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.


குறித்த நபரின் மனைவி வெளியில் சென்று திரும்பியவேளை தன் கணவர் தூக்கில் சடலமாக கிடந்ததை கண்டுள்ளார்.

தொடர்ந்து, கிராம மக்கள் பொலிஸாருக்கு அறிவிக்க, பூவரசங்குளம் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் வவுனியாவில் விபத்தில் ஒருவரும், நீரில் மூழ்கி இரு சிறுவர்களும், தூக்கில் தொங்கிய இந்த நபருமாக மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




வவுனியாவில் வீட்டில் தூக்கில் தொங்கிய குடும்பஸ்தார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு