02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

15 வருடங்களின் பின் இன்று நாடு திரும்பிய தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு சிறை

15 வருடங்களின் பின் இன்று நாடு திரும்பிய தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்ராவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 8 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 2001 முதல் பிரதமராக பதவி வகித்த தக்சின் ஷினவாத்ரா, 2006 ஆம் ஆண்டு இராணுவத்தினால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். ஆதன்பின் அவர் நாட்டிலிருந்து வெளியேறினார். 

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 



இந்நிலையில், அவரின் கட்சி ஆட்சிப்பொறுப்பை ஏற்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தக்சின் ஷினவாத்ரா இன்று நாடு திரும்பினார். 

அதன்பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆப்போது அவரை 8 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.





15 வருடங்களின் பின் இன்று நாடு திரும்பிய தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு சிறை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு