மட்டக்களப்பில் இளம் பெண் ஒருவர் ஆசிரியரான தனது கணவர் தினமும் 7 முறை உறவுக்கு அழைப்பதாக கூறி விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வழக்கு கடந்த வாரத்தில் முதல் முறையாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது. திருமணமான 5 ஆவது மாதத்தில், 25 வயதான பெண் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
பாடசாலையால் வீடு வந்ததில் இருந்து மறுநாள் காலை வரை கட்டாயப்படுத்தி உறவுகொள்வதாக கொள்வதாக குறித்த மனைவி குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்தபோது, தன்னை தாக்கி பலவந்தமாக உடலுறவு கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கணவனின் கொடுமையிலிருந்து தப்பித்து தற்போது பெற்றோருடன் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டு மேற்படி பெண் விவாகரத்து கோரியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
0 Comments
No Comments Here ..