14,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

இலங்கை வரவுள்ள அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க உள்ளிட்டோருடன் கலந்துரையாடவுள்ளார்.

தொடர்ந்து திருகோணமலைக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் விஜயம் செய்யவுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் அமைக்கப்படவுள்ள எண்ணெய்க் குழாய் நிர்மாணத்தையும் அவர் பார்வையிடவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தபோது, எண்ணெய்க் குழாய் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பிலும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.



அத்தோடு திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் அவ்விடயம் குறித்தும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கவனம் செலுத்தவுள்ளார்.

இதனை விட, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் முப்படைகளின் தளபதிகளையும் சந்திக்கவுள்ளார்.

சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் - 6 இலங்கைக்கு வருகை தர திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு