14,May 2024 (Tue)
  
CH
SRILANKANEWS

துரியன் பழம் பறிக்க சென்ற இளைஞன் பலி!

மேற்கு பத்பேரிய - வடப்பிட்டிய பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எஹெலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் வடப்பிட்டிய - பரகடுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.


உயிரிழந்தவர் துரியன் மரம் ஒன்றிற்கு அருகில் காலில் தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த காணியின் உரிமையாளர் துரியன் பாதுகாப்பிற்காக மின்சார வேலி அமைந்துள்ள நிலையில் குறித்த மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரான 51 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




துரியன் பழம் பறிக்க சென்ற இளைஞன் பலி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு