வீடொன்றின் பாதுகாப்பற்ற மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல், ஹிந்தகொல்ல கல்பொத்தவத்த பிரதேசத்தில் நேற்று (02) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
15 வயதுடைய சுதேஷ் மதுஷங்க தனது வீட்டிற்கு அருகில் தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த போது இவ்விபத்தில் சிக்கியுள்ளார்.
அயல் வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன், குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சுதேஷ் மதுஷங்க ஹிந்தகொல்ல திகம்பிட்டிய ஸ்ரீ பியரதன மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் நிலையில் இவ்வருடம் தரம் 10 க்கு சித்தியடைந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
0 Comments
No Comments Here ..