சீனாவின் வுஹான் நகரிலிந்து 33 இலங்கை மாணவர்களை மீட்பதற்காக அங்கு சென்றிருந்த விசேட விமானம் இன்று காலை இலங்கையை வந்தடைந்தது.
யு.எல் 1423 ரக விமானம் காலை 7.42 அளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
அந்த விமானத்தில் இலங்கையை வந்தடைந்த மாணவர்கள், தியத்தலாவையில் உள்ள நோயியல் ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
கடந்த 5 நாட்களுக்குள் சீனாவிலிருந்து 627 இலங்கையர்கள் நாடுதிரும்பியுள்ளதாக தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, சீனாவிலிருந்து இன்று நாடுதிரும்பிய 33 மாணவர்களுடன் அந்த எண்ணிக்கை 660ஆக அதிகரிக்கிறது.
இந்த நிலையில், சீனாவிலுள்ள மேலும் 204 இலங்கையர்களை, நாட்டுக்கு மீள அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரக காரியாலயம் தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..