10,May 2024 (Fri)
  
CH
SRILANKANEWS

கஞ்சாவுடன் பிடிபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!

புத்தளம் பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கடந்த 23 ஆம் திகதி புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணி இடைநிறுத்தம் செய்தார். கல்பிட்டி - அந்தாங்கண்ணி பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார். கடந்த 22 ஆம் திகதி மாலை ஏத்தாலை - ஆங்குடா பிரதேசத்தில் இரகசிய இடத்தில் சிலர் கஞ்சா குடிப்பதாக நுரச்சோலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.


அந்த தகவலின் பிரகாரம் 7 சந்தேகநபர்கள் நுரச்சோலை பொலிஸ் அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.


அவரிடம் சோதனை நடத்திய அதிகாரிகள் 1,200 மில்லி கிராம் கஞ்சாவை கண்டுபிடித்தனர். பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 7 சந்தேக நபர்களும் 23 ஆம் திகதி மாலை கல்பிட்டி பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனை அடுத்து சந்தேகநபர்கள் 1 இலட்சம் ரூபா பெறுமதியான தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.




கஞ்சாவுடன் பிடிபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு