இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக ஶ்ரீ கோபால் பாக்லே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வௌிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
புதுடில்லியிலுள்ள இந்திய பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக பணியாற்றிவரும் கோபால் பாக்லே, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராகவும் பணியாற்றியுள்ளார். 1992 ஆம் ஆண்டு இந்திய வெளிவிவகார சேவையில் இணைந்த கோபால் பாக்லே, மிக முக்கிய பொறுப்புக்களை வகித்து வந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றி வந்த தரன்ஜித் சிங் சந்து, அமெரிக்காவில் இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..