மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பகுதியில் புகையிரத்துடன் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்றிரவு (25) 11 மணியவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கருவப்பங்கேணியைச் சேர்ந்த 25 வயதுடைய ஆகாஷ் என்றழைக்கப்படும் அசோக்குமார் சனுஜன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் கருவப்பங்கேணி பகுதியில் வைத்து குறித்த இளைஞன் மோதியதையடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சடலத்தை பொலிசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..