19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது தொடர்பில் கடிதம்-மனோ

முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், இந்த கடைசி தருணத்திலாவது நல்ல முடிவை நீங்கள் எடுக்க வேண்டும் என கோர விரும்புகிறேன்.


சுதந்திர தின வைபவத்தில் தமிழ் மொழியில் இலங்கை தேசிய கீதம் பாடப்படும் கடந்த நான்கு வருட நடைமுறையை உங்கள் நிர்வாகம், மாற்றி விடக்கூடாது என நான் விரும்புகிறேன்.


தமிழ் மொழியில் பாடப்படும் தேசிய கீதம் என்பது இன்னொரு வழமையான பாடல் அல்ல.


அது தமிழ் பேசும் இலங்கையர்களின் “இலங்கையர் அடையாளம்”. இதுதான் இன்றைய காலகட்டத்தின் தேவை, என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பீயுமான மனோ கணேசன் தனது டுவிட்டர் தளத்தின் மூலம் ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷவுக்கு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.


இந்த டுவிட்டர் செய்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷவின் டுவிட்டர் தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது தொடர்பில் கடிதம்-மனோ

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு