09,May 2024 (Thu)
  
CH
SRILANKANEWS

காத்தான்குடி வீடொன்றில் இருந்து 30 பேர் கைது!

காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கூட்டம் நடத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுத்துள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின் கணவர் மற்றும் 4 பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் நேற்று (01) அதிகாலையில் கைது செய்துள்ளதுடன் 23 மோட்டர்சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றையும் மீட்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு பொலிஸார் சென்று விசேட சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இது பற்றி மேலும் தெரிய வருகையில், காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் 29 ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக உயிர்த்த ஞாயிறு பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமினின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுவதோடு ஒன்று கூடியதாக புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது


இதனையடுத்து சம்பவதினமான 29 ஆம் திகதி இரவு குறித்த வீட்டில் பலர் ஒன்று கூடியநிலையில் குறித்த வீட்டை சம்பவதினமான நேற்று அதிகாலை 2 மணிக்கு பொலிஸாருடன் பலனாய்வு பிரிவினரும் இணைந்து குறித்த வீட்டை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், தேசிய புலனாய்வு பிரிவினர் பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட பலர் சென்று ஹசீமின் அடிப்படைவாத கொள்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒன்று கூடினார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதுடன் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசிகளை பரிசோதனை செய்தனர்.




காத்தான்குடி வீடொன்றில் இருந்து 30 பேர் கைது!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு