பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்த திருகோணமலை ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவன் ஹரிஹரன் தன்வந்தை யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினர் இன்று கௌரவித்தனர்.
இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. கௌரவிப்பு நிகழ்வில் யாழ்ப்பாணம் வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரன் உள்ளிட்ட வணிகர் கழக உறுப்பினர்கள், கலந்து கொண்டிருந்தனர். தனுஷ்கோடியில் இருந்து பாக்கு நீரிணை வழியாக தலைமன்னார் வரை நீந்தி 13 வயதுடைய ஹரிஹரன் தன்வந் நேற்று சாதனை நிகழ்த்தினார்.
திருகோணமலை ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவரான தன்வந் நேற்று (01) அதிகாலை 4.15 அளவில் தனுஷ்கோடியிலிருந்து நீந்த ஆரம்பித்துள்ளதுடன், நேற்று பகல் 1.47 அளவில் தலைமன்னாரை வந்தடைந்துள்ளார். தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கான 30 கிலோ மீற்றர் தூரத்தை அவர் 9 மணித்தியாலங்கள் 32 நிமிடங்கள் 49 விநாடிகளில் நீந்திக் கடந்து சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..