13,May 2024 (Mon)
  
CH
SRILANKANEWS

வவுனியாவில் அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!!

வவுனியா, ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் நேற்று (05) மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். கைவிடப்பட்ட கற்க்குவாரியாக காணப்பட்ட அந்த பகுதியில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக அப் பகுதிக்கு சென்றவர்களால் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் அழுகிய நிலையில் உள்ளமையினால் சில தினங்களிற்கு முன்னராகவே இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிஸார் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




வவுனியாவில் அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு