13,May 2024 (Mon)
  
CH
SRILANKANEWS

73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு வான் சாகசம் – 2024!

இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு 'வான் சாகசம் – 2024' கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம், முற்றவெளி மைதானத்தில் இன்று (06) ஆரம்பமானது. “நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம், முற்றவெளி மைதானத்தில் இன்று (10) ஆரம்பமாகிய குறித்த கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதிவரை காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

அதிகமான பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிடுவதற்கான வருகை தந்துகொண்டிருப்பபை அவதானிக்க முடிந்தது. கண்காட்சியில் விமான படை வீரர்களின் சாகசங்கள் இடம்பெற்று வருவதுடன், ஆளில்லா விமானங்கள், விமானப்படையின் தளபாடங்கள், உலங்கு வான் ஊர்திகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்கள் இந்த கண்காட்சியை முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும் என்பதுடன் ஏனையோர் 100 ரூபா கட்டணம் செலுத்தி இந்த கண்காட்சியை பார்வையிட முடியும்.






73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு வான் சாகசம் – 2024!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு