கடந்த 25ஆம் திகதி ஜம்பட்டா வீதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்ல முயற்சித்த சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் அவருக்கு உதவிய மூவரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர். இதன்போது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கி எடுத்துச் சென்ற முச்சக்கரவண்டியையும் பொறுபேற்றுள்ள பொலிஸார், சந்தேகநபரிடம் இருந்து குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தாத மற்றுமொரு துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கியை மறைத்து வைப்பதற்காக குறித்த முச்சக்கரவண்டிக்கு துப்பாக்கியை வழங்கிய விதம் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய அந்த பிரிவின் பொலிஸ் பரிசோதகர் அன்ஸ்லம் சில்வாவின் மேற்பார்வையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ரேணுக சதுரங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
0 Comments
No Comments Here ..