09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

கூட்டம் கூட்டமாக வந்து பயிரை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள்: பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்

பாகிஸ்தானில் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருவதை தொடர்ந்து விவசாயிகள் கதிகலங்கியுள்ளார். இதனால் அங்கு தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள் சில மணி நேரங்களில் மொத்தமாக கோதுமை பயிர்களை அழித்து நாசம் செய்து விவசாயிகளை அதிர்ச்சியடையவைத்தன.

சில வாரங்கள் பஞ்சாப்பில் முகாமிட்டு பயிர்களை அழித்தவெட்டுக்கிளிகள் தற்போது மீண்டும் பாகிஸ்தானில் முகாமிட்டுள்ளன. பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கோதுமை உள்ளிட்ட பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகின்றன.

20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருவதால் லட்சக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான கூட்டம் இஸ்லாமாபாத்தில் நடந்தது. அப்போது வெட்டுகிளிகளை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.

வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களைகாப்பாற்றும் பணிகளுக்காக ரூ.730 கோடி ஒதுக்கீடு செய்யவும் இந்தகூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.




கூட்டம் கூட்டமாக வந்து பயிரை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள்: பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு