யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரணையில் சித்த மருத்துவ முகாம் ஒன்று இன்று (16) கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த மருத்துவ முகாம் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது. யாழ். இந்திய துணைத்தூதரகமும், வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த மருத்துவ முகாம் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் யாழ். இந்திய துணைத்தூதரக உயர் அதிகாரி மனோஜ்குமார் கலந்து கொண்டார். குறித்த மருத்துவ முகாமில் பரிசோதிக்கப்பட்டு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டதுடன், பரிசோதனைகளும், ஆலோசனைகளும் இடம்பெற்றன.
யாழ். இந்திய துணைத் தூதரகத்தினால் 2022 ஆண்டு முதல் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அனைவருக்கும் சித்தா மருத்துவம் என்ற கருப்பொருளில் வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்துடன் இணைத்து வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவ முகாம்களினை ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..