நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்குட்பட்ட நுவரெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கான அரையாண்டு பரீட்சை இன்று (17) காலை 7.30 மணிக்கு நுவரெலியா மாநகர சபை விளையாட்டரங்கில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த ஹக்மன தலைமையில் நடைபெற்றது.
நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தலைமையில் நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட அனைத்து தரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 343 அதிகாரிகள் இங்கு பரிசோதிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த ஹக்மான மற்றும் பிரதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு சமன் ஜயசுந்தர ஆகியோரும் கலந்து கொண்டனர்
0 Comments
No Comments Here ..