போன் பேசிக்கொண்டே பெற்ற பிள்ளையை குளிர்சாதன பெட்டியில் வைத்து பூட்டிய தாய் ஒருவர் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எவ்வாறாயினும், குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது.
கடந்த மாதம் 26 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறித்த காணொளி ஊடாக தெரிய வருகிறது. எவ்வாறாயினும், இந்த சம்பவம் இடம்பெற்ற இடம் குறித்த எந்த தகவலும் இதுவரை தெரியவரவில்லை. மேலும், இது ஒரு விழிப்புணர்வு காணொளி எனவும் சிலரால் கூறப்பட்டு வருகிறது.
0 Comments
No Comments Here ..