09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

அமெரிக்காவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் பயன்பாடு

கொரோனா வைரஸ்தொற்றுக்கு சிகிச்சை வழங்குவதற்காக அமெரிக்கா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக எபோலோ நோயாளர்களிடையே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மருந்துகளை பயன்படுத்தி வருவதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் மற்றும் எபோலோ நோய்க்கான சிகிச்சை முறைகள் வேறாக இருந்தாலும் குறித்த மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

இந்த நிலையிலேயே, அமெரிக்கா குறித்த மருந்தை பயன்படுத்தி கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 




அமெரிக்காவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் பயன்பாடு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு