கொவிதுபுர - ஜெயந்தி ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நேற்று (20) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கொட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இவர் நேற்று முன்தினம் (19) வீட்டில் இருந்து மீன் பிடிக்கச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொவிதுபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..