துருக்கியில் இடம்பெற்ற விமான விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் அமைந்துள்ள விமான நிலையத்தில் பீகஸஸ் (Pegasus) எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானது.
183 பயணிகளுடன் பயணித்த குறித்த விமானம் ஓடுதளத்தில் காணப்பட்ட ஈரலிப்புத் தன்மை காரணமாக, விபத்துக்குள்ளானதில் மூன்று துண்டுகளாக உடைந்தது.
இதன் காரணமாக மூவர் உயிரிழந்ததுடன், ஏனையோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..