இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தினசரி சம்பள அடிப்படையில் பணியாற்றிய 167 ஊழியர்களையும் மீள இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட குழுவினருக்கும் மின்வலு மற்றும் சக்திவலு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு மற்றும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்தவுடன் குறித்த 167 பேரையும் மீள சேவையில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
உரிய கல்வித் தகுதியை உடைய இளைஞர்களான குறித்த தரப்பினர், நாளாந்த சம்பள அடிப்படையில், தொழிலாளர் தரத்துக்கு கடந்த அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இதேவேளை, இந்த நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் போது, கட்சி பேதம் இன்றி அனைவருக்கும் வாய்ப்பளிக்க உள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..