கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச ரீதியில் 34 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சீனாவின் Hubei மாகாணத்தில் மாத்திரம் 780 பேர் உயிரிழந்துள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, sars virus சார்ஸ் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2002 மற்றும் 2003 காலப்பகுதியில் பரவிய சார்ஸ் நோய் காரணமாக 774 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 813 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 198 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 2 ஆயிரத்து 656 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 2 ஆயிரத்து 147 பேர் கொரோனாவின் மையப் புள்ளியான ஹுபே மாகாணத்தில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..