கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நிபுணர் குழுவொன்று சீனாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்ப வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் பிரகாரம் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட மூவாயிரத்து 281 நோயாளர்கள் பூரண சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 ஆயிரத்து 171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 518 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் சீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..