தெற்கு அல்ஜீரியாவில் ராணுவ தளமொன்றை இலக்குவைத்து தற்கொலை குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக அல்ஜீரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தெற்கு அல்ஜீரியாவில் ராணுவ தளமொன்றை இலக்குவைத்து நேற்று இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அல்ஜீரியாவின் அண்டை நாடான லிபியா மற்றும் மாலியில் முன்னெடுக்கப்பட்டுவரும் மோதல்சம்பவங்கள் அதிகரித்துள்ளநிலையில் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள்அல்ஜீரியாவில் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அல்ஜீரியாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு எரிவாயு பதப்படுத்தும் நிலையம் ஒன்றில் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் நடாத்திய தாக்குதலில் வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
0 Comments
No Comments Here ..