உகண்டாவின் நீண்டகால ஜனாதிபதியான 80 வயதாகும் யோவேரி முசேவேனி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் ஆளும் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது, அவரது கிட்டத்தட்ட 40 ஆண்டுகால ஆட்சியை மேலும் நீடிக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால், உகண்டாவை உயர் நடுத்தர வருமான நாடாக மாற்றுவதற்கான பணிகளைத் தொடர முடியும் என்று முசேவேனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எனினும், விமர்சகர்கள் முசேவேனியின் ஆட்சியை இரும்புக் கரம்கொண்ட ஆட்சி என்று வர்ணிக்கின்றனர். அவர் 1986 ஆம் ஆண்டில் ஒரு கிளர்ச்சித் தலைவராக நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, அதற்குப் பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார். மேலும், அவர் பதவியில் நீடிக்க அனுமதிக்கும் வகையில், அரசியலமைப்பு இரண்டு சந்தர்ப்பங்களில் வயது மற்றும் பதவிக்கால வரம்புகளை நீக்குவதற்காகத் திருத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..