கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயித்து 206 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் சுகாதார இணையம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், சீனாவின் ஹபே மாகாணத்தில், நேற்றைய தினத்தில் மாத்திரம் 242 பேர் உயிரிழந்துள்ளதோடு, 14 ஆயிரத்து 840 பேர் புதிதாக நோய் தாக்கத்திற்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக் காணமாக இதுவரை ஆயிரத்து 310 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக கண்டறியப்பட்டுள்ள நோயாளர்களுக்கு தனியாக சிகிச்சைகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜபான் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் மாத்திரம் 39 பேர் இந்த நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக அந்த நாட்டு சுகாதார துறை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பயணிகள் கப்பல் ஒன்று கடந்த 3 ஆம் திகதி முதல் கடற்பரப்பிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த கப்பலில் 3 ஆயிரத்து 700 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கப்பலில் உள்ளவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான நிலை கண்டறியப்படும் இடத்து அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படடுவருவதாக ஜபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..