20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

இலவச விசா திட்டம் 3 மாதங்களுக்கு நீடிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த 48 நாடுகளுக்கான இலவச விசா திட்டத்தை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இந்த திட்டத்தை நீட்டிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அந்த வகையில் அவுஸ்ரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இத்தாலி, மலேஷியா, நியூசிலாந்து, நோர்வே, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற 48 நாடுகளுக்கு இந் த சலுகை வழங்கப்பட்டுள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், இந்த இலவச விசா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




இலவச விசா திட்டம் 3 மாதங்களுக்கு நீடிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு