13,May 2025 (Tue)
  
CH
இலங்கை செய்தி

விடுமுறை நாட்களை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

வாராந்த விடுமுறை நாட்களை முன்னிட்டு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.

கொழும்பு கோட்டை – பதுளை மற்றும் பதுளை- கொழும்பு கோட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த விசேட ரயில் சேவை நடைபெறவிருப்பதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது..

இதற்கமைவாக இரவு 7.35 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில், அதிகாலை 4.50 மணிக்கு பதுளை ரயில் நிலையத்தை சென்றடையும்.

அதேபோன்று இரவு 8.30 மணிக்கு பதுளை ரயில் நிலையத்திலிருந்து பயணிக்கும் ரயில், காலை 5.27 மணியளவில் கொழும்பு கோட்டை நிலையத்தை சென்றடையும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.





விடுமுறை நாட்களை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு