06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

நைஜீரியாவில் பொலிஸ் பாதுகாப்பை மீறி ஒரே சமயத்தில் இரண்டு கிராமங்களில் தாக்குதல்: 30 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் வடக்கு மாகாணமான காட்சினாவில் உள்ள 2 கிராமங்களுக்குள் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 30பேர் உயிரிழந்துள்ளனர்.

பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இத்தாக்குதல் சிறுவர்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

2 கிராமங்களிலும் பொலிஸ் பாதுகாப்பை மீறி இந்த தாக்குதல் நடந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த புதன்கிழமை கதுனா மாகாணத்தில் உள்ள பகாலி என்ற கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேரை உயிரோடு தீவைத்து எரித்து கொன்றமை குறிப்பிடத்தக்கது.





நைஜீரியாவில் பொலிஸ் பாதுகாப்பை மீறி ஒரே சமயத்தில் இரண்டு கிராமங்களில் தாக்குதல்: 30 பேர் உயிரிழப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு