ஜேர்மனியின் Hanau நகரத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் எட்டுபேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
அடையாளம் தெரியாத சிலரினால் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நகரத்தின் இரண்டு இடங்களில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கான காரணமும் இதுவரை கண்டிறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஜேர்மனின் Hanau நகர காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..