நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்தவுடன் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட திட்டங்கள் தயாரித்து நிறைவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றங்கள்,மனித உரிமைகள் மற்றும் சட்டமறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்
மாகாண சபைத் தேர்தல்கள் இழுத்தடிக்கப்படுவது குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில் தற்போது இருக்கும் சட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்,
தமது அமைச்சுடன் இணைந்து உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டங்களை உருவாக்கி வருவதாக அமைச்சர் மேலும் கூறினார்.,
இந்த தேர்தலை நடத்துவதற்கு பல ஆண்டுகள் தாமதமடைந்துள்ளமையினால் மக்களுக்கு தேவையான சேவைகளை பெற்றுக் கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,
0 Comments
No Comments Here ..