19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

மருந்துகளின் தரத்தை ஆராய ஆய்வகம் ஒன்றை அமைக்க நடவடிக்கை

இந்நாட்டுக்கு கொண்டு வரப்படும் மருந்துகளின் தரத்தினை பரிசோதனை செய்வதற்காக மருந்து ஒழுங்குமுறை ஆய்வகம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர்,

கடந்த காலங்களில் மருந்து கொள்வனவு தொடர்பில் ஏராளமான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

சில சந்தர்ப்பங்களில் குறைந்த விலைக்கு மருந்துகளை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் காணப்பட்ட போதிலும் அதிக விலைக்கு மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நூறு மடங்கு அதிக பணம் இதற்காக செலுத்தப்பட்டு மருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன.

அதேபோல், மருந்துகளின் தரம் தொடர்பில் பரிசோதிக்க வேண்டியுள்ளது. அதற்காக மருந்து ஒழுங்குமுறை ஆய்வகம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை தற்போதைய நிலையில் இடம்பெற்று வருகின்றது என்றார்.




மருந்துகளின் தரத்தை ஆராய ஆய்வகம் ஒன்றை அமைக்க நடவடிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு