உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,345 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 109 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சீனா தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில், மாகாண தலைநகர் வுஹானில் மட்டும் 90 பேர் உயிரிழந்துள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சீனாவின் பிரதான பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸிற்கு புதிதாக 397பேர் பாதிப்படைந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 76,288 பாதிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..