09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

ஐரோப்பாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் 25 வீதமாக அதிகரிப்பு!

ஐரோப்பாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் 25 வீதமாக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன,

இந்த நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது,

நேற்று இரவு மாத்திரம் 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் பொது இடங்களில் மக்கள் நடமாட்டத்தைக் குறைத்து இந்த வைரஸ் பரவுவதை அரசாங்கம் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது,

இத்தாலியின் 11 நகரங்களில் நிலையங்கள் அமைக்கப்பட்டு 55 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஐரோப்பாவின் மேலும் சில நாடுகளிலும் இதன் தாக்கம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,

மேலும் உலகளாவிய ரீதியில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் 80 ஆயிரம் பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகின்றது,

அத்துடன் சீனாவில் பரவிய வைரஸொன்று சர்வதேச மட்டத்தில் வேகமாக பரவுவது இதுவே முதற்தடவையாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது,




ஐரோப்பாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் 25 வீதமாக அதிகரிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு