எம்.சி.சி. எனப்படும் மிலேனியம் நிறுவனத்துடனான உடன்படிக்கையைக் கைவிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுள்ள அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான எம்.சி.சி. ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கு 4 பேர் கொண்ட குழு அண்மையில் அமைக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த குழுவின் முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..