29,Apr 2024 (Mon)
  
CH
உலக செய்தி

கொரோனா வைரஸ்- சீனாவில் இதுவரை 3042 பேர் பலி

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார் 85 நாடுகளில் பரவி உள்ளது. 

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 3012 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று மேலும் 30 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3042 ஆக உயர்ந்துள்ளது. நேற்று உயிரிழந்த 30 பேரில் பெரும்பாலானவர்கள் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். 

இதுதவிர நேற்று புதிதாக 143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மொத்தம் 80 ஆயிரத்து 552 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். 







கொரோனா வைரஸ்- சீனாவில் இதுவரை 3042 பேர் பலி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு