பிரான்ஸில் இரண்டு முக்கிய சர்வதேச விமானநிலையங்களை இயக்கும், தலைமை நிர்வாகிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பிரான்சில் தற்போது வரை 1784 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 பேர் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனர்.
இருப்பினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பிரான்ஸ் தலைநகரின் இரண்டு முக்கிய சர்வதேச விமான நிலையங்களை இயக்கும் பாரிஸ் விமான நிலையங்களின் தலைமை நிர்வாகி Augustin de Romanet-க்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Augustin de Romanet வாரத்தின் இறுதியில் கொரோனா வைரஸிற்கான சோதனை நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலுக்கு விமானநிலையங்கள் காரணமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தலைமை நிர்வாக அதிகாரி இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்படு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பாரிசின் Roissy-Charles de Gaulle மற்றும் Orly விமான நிலையங்கள் உலகின் பரபரப்பான விமானநிலையங்களில் ஒன்று, ஒவ்வொரு ஆண்டும் இங்கு 100 மில்லியனுக்கு அதிகமான மக்கள் கடந்து செல்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்தபடியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..