02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

கோவிட் 19க்கு மத்தியில் நடக்கும் தென் கொரியா தேர்தல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்பான பாதிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருந்து வரும் சூழலில், பலத்த பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளோடு தென் கொரியாவில் நாடளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 15) காலை முதல் நடந்து வருகிறது.

வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்களுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி வேண்டும், வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்டு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட இந்த நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது.

மேலும் வாக்களிக்க வருபவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே, அவர்கள் வாக்குசாவடிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தென் கொரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஒருபோதும் தள்ளிவைக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1952-இல் நடந்த கொரிய போரின்போதும் அங்கு தேர்தல் நடைபெற்றது.

தென் கொரிய நாடாளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 43.9 மில்லியன் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.




கோவிட் 19க்கு மத்தியில் நடக்கும் தென் கொரியா தேர்தல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு