03,May 2024 (Fri)
  
CH
உலக செய்தி

பிரான்சில் கொரோன பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறதா?

கடந்த மூன்று வாரமாக பிரான்ஸில் கரோனா பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது

இதுகுறித்து சினுவா வெளியிட்ட செய்தியில், “பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்று காரணமாக 135 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பிரான்ஸில் கரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிகை 24,895 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மூன்று வாரமாக பிரான்ஸில் கரோனா பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது

இதுகுறித்து சினுவா வெளியிட்ட செய்தியில், “பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்று காரணமாக 135 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பிரான்ஸில் கரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிகை 24,895 ஆக அதிகரித்துள்ளது.

பிரான்ஸில் 1,68,693 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,819 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கடந்த மூன்று வாரமாக பிரான்ஸில் கரோனா தொற்று மற்றும் கரோனா வைரஸால் ஏற்படும் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது” என்றார்.

பிரான்ஸில் கடந்த மார்ச் மாதம் கரோனா வைரஸின் தீவிரம் அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து அங்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரான்ஸில் கரோனாவினால் ஏற்படும் தொற்று மற்றும் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மே 11-ம் தேதிக்குப் பிறகு பிரான்ஸில் ஊரடங்கு உத்தரவு படிப்படியாகத் தளர்த்தப்படும் என்று அதிபர் மேக்ரோன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

உலகம் முழுவதும் 3,566,469 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 11,54,549 பேர் குணமடைந்துள்ளனர்




பிரான்சில் கொரோன பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறதா?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு