19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

சுதந்திர தினத்தில் பங்கேற்றவர்களில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட சிவில் பாதுகாப்பு திணைக்கள குழுவில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அத்துடன் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட கதிர்காமம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட முன்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பதுடன் நிகழ்வின் பின்னர் கதிர்காமத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.




சுதந்திர தினத்தில் பங்கேற்றவர்களில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு