லுனுகலை மடுல்சீமை எக்கிரிய பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலைநடுக்கம் லுனுகல எக்கிரிய பகுதியில் இன்று அதிகாலை 4.53 அளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிக்கின்றது.
ரிக்டர் அளவுகோலில் குறைந்தளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த பகுதியில் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதனிடையே கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி நுவரெலியா – வலப்பனை பிரதேசத்தில் சிறியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..